இடர் மேலாண்மையில் நான்கு படிநிலைகள் உள்ளன அவை
🌼preparedness - இடர் வரும் முன் தயார் நிலையில் இருப்பது
🌼response - பாதிப்பு ஏற்பட்டவுடன்/ ஏர்படவிருக்கும் பாதிப்பை உணர்ந்து எதிர்வினையாற்றுவது
🌼 recovery - அதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை
🌼mitigation - பேரிடரின் தீவிரத்தை மட்டுப்படுத்துவது.
பேரிடர் என்பது இயற்கை பேரிடர் அல்லது மனித செயல்பாடுகளால் செயற்கையாக ஏற்படுவது என இருவகையாக பிரிக்கலாம். ஆக இடர் மேலாண்மை துறை என்பது எவ்வகை பேரிடராக இருந்தாலும் அதற்கு தயார்நிலையில் இருந்து உடனுக்குடன் செயல்பட வேண்டும். ஆனால் நம் மாநிலத்தில் நிதர்சம் வேறாக உள்ளது. தமிழக அரசின் இடர்மேலாண்மை பட்டியலில் இயற்கை பேரிடர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளபட்டுள்ளது. அதன் விளைவுதான் வாலியும் குண்டானும் கொண்டு டன் கணக்கில் மிதந்த எண்ணெயை அப்புறபடுத்த உபயோகித்தோம். சென்னை சிக்ஸில் பற்றி எரிந்த தீயை அனைக்க உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது. அது தான் அப்படி என்றால் இயற்கை பேரிடர்களின் போது கனகச்சிதமாக செயல்படுவார்கள் என்று பார்த்தால் சுனாமியிலும் சென்னை வெள்ளத்திலும் மங்குனி ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் சொல்வதற்கு ஒன்றுமில்லை ரகம் தான். ஓகி புயலில் சிக்கிய குமரி மாவட்ட மாவட்ட மீனர்களை மீட்பதில் அவர்களின் செயல்தீவிரம் ஸ்லோமோஷன் சீனைவிட படு ஸ்லோ. இந்த திறமையான ஆட்சியாளர்களும் அவர்களின் சகாக்களும் அணுவுலை விபத்து நடந்தால் என்ன அழகாக எவ்வளவு வேகம் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்று நான் சொல்லி தெரியலை வேண்டியதில்லை. அணுவுலை விபத்து நடந்தால் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் உங்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருக்குமாம். அட அப்பறம் என்னப்பா லைட்டா தீஞ்ச வாட வீசினாலும் பஸ் ஏறிட வேண்டியது தான்.
அட இருங்கப்பா இதையும் கேட்டுட்டு போங்க. கூடங்குளம் சுத்துபட்டி கிராமத்துல எத்தன உருப்படி இருக்காவனு கவர்மன்டுகே தெரியாதாம். அட பாவத்த! சரிரிரி தோராயமா ஒரு நாலஞ்சு பஸ் நிக்கும் அதுல ஏறி தப்பிச்சுகிடலாம். அதெல்லாம் நமக்கென்ன இப்ப? வரத வரப்ப பாத்துக்குவோம்.அடுத்த தேர்தல்லயும் வழக்கம் போல சின்னத்த பாத்து பொத்தான அமுக்கீருவோம். நமக்கு எதுக்கு வம்பு நாம இருக்க எடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்!!
புதன், 6 டிசம்பர், 2017
இடர் மேலாண்மை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)