கிமுராவின் அழகிய குடும்பத்தை ஆழிப்பேரலையும் அணுவுலை விபத்தும் நிர்மூலமாக்கிவிட்டிருந்த நிலையில். தன் தந்தை மற்றும் மனைவியின் சடலங்கள் கிடைத்த பின் தன் ஆசை மகள் யூனா மட்டும் காணாமல் போனவர்கள் பட்டியலில் நீடிக்க, என் மகள் எங்கோ உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை ஒரு பக்கம் இல்லை அவளும் இறந்திருப்பாளோ என்ற பயம் மறுபக்கம் என்ற உணர்ச்சிப்போராட்டத்தினூடே பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வாழ்ந்த ஒஃகுமா நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தன் ஆறு வயது மகளின் நிலை அறியாமல் கிமுரா தினம் தினம் கலங்கி போனார். ஒரு வழியாக ஒஃகுமா நகருக்கு மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டனர். நம்பிக்கை துளிர்த்தவராக தன் அன்பு மகளை தேடியவருக்கு அவள் அணிந்திருந்த தலைக் குள்ளா மட்டும் தான் முதலில் கிடைத்தது. பிறகு தொடர்ந்து தேடியதன் விளைவால் கழுத்து மற்றும் தாடை எழும்புகள் கிடைத்தது. மரபணு சோதனையில் அவை யூனாவுடையது என்பது ஊர்ஜிதமானது. ஆனாலும் என் மகளின் முழு உடல் பாகங்கள் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதியோடிருந்து, அத்துயர சம்பவம் நிகழ்ந்து ஆறு வருடங்களுக்கு பின் தன் மகளின் முழு உடல் பாகங்களையும் கண்டுபிடித்திருக்கிறார். டெப்கோவின் மீதும் அரசாங்கதின் மீதும் அளவிடமுடியாத கோபம் எனக்கு உண்டு என்கிறார் கிமுரா. ஒரு தந்தையாய் அவருடைய நிலை மிக துயரமானது. அதை விதி என்றோ காலத்தின் கட்டாயம் என்றோ கடந்து போய்விட முடியாது. அது அரசால் ஏய்க்கப்பட்ட குடிமக்களின் பிரதிநிதித்துவ குரல். இனி எப்போதும் ஒரு தந்தை தன் மகனையோ மகளேயோ இப்படி சதை எழும்பு கூறுகளாய் தேடும் அவலம் நேர்ந்து விடக்கூடாது என்பதன் எச்சரிக்கை குரல். இதுபோல மனதை கசக்கி பிழியும் சம்பவங்கள் ஏராளம். நாம் எப்போதும் போல வேடிக்கை பார்ப்போம். வேறென்ன செய்ய முடியும் நம்மால்?
https://dunrenard.wordpress.com/2016/12/26/fukushima-dad-finds-remains-of-daughter-but-no-closure-for-311/
திங்கள், 20 நவம்பர், 2017
அணுவுலை பலிகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக