நான் ரசித்த பல்லி....<3
விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம் எனக்கு...ஆனால் பல்லிகளை கண்டால் மட்டும் ஏனோ பிடிக்காது. சிறு வயதில் இருந்தே அதன் இனமே அறவே பிடிக்காது..... என்னை தேடி வந்து தொல்லை செய்வதாக தோன்றும்...
ஒரு நாள்....அனேகமாக நா அப்போ ஆறாவது படிச்சிட்டு இருந்தேன்னு நெனைக்கிறேன். அது லீவ் சமயம், நா, என் தம்பி, அப்பறம் என் செட்டு சொந்தக்கார பிள்ளைங்க ரெண்டு பேருன்னு நாங்க நாலுபேரும் மும்மறமா விளையாடிட்டு இருந்தோம். சாயந்தர நேரம்னால வீட்டிக்குள்ளையே தான் விளையாடினோம். நா சுவத்துல சாய்ஞ்சு உக்காந்திருந்தேன் மத்தவங்க எனக்கு எதிர்ல உக்காந்திருந்தாங்க. அன்னிக்கு ஒரு மஞ்ச கலர் ஃபிரில் வைச்ச ப்ராக் போட்ருந்தேன். சட்டையில முன்புறம் ஒரு பெரிய பாக்கெட் போல இருக்கும். இவ்ளோ கரைக்டா ஞாபகம் வச்சிருக்கேன்னு ஆச்சர்யமா இருக்கா? அவசரபடாதீங்க அதுக்கு காரணம் இருக்கு.....
சரி அதை விடுங்கப்பா கதைக்கு வாங்க. ஏதோ செட்டு விளையாட்டு விளையாடி சிரிச்சிட்டு இருந்தோம்...அப்போ என் தலைக்கி மேல சுவத்துல ரெண்டு பல்லிங்க சண்டபிடிச்சிட்டு இருந்தத நாங்க யாரும் கவனிக்கல. அவங்க சண்ட போட்டு உருண்டு விழ நானாகெடச்சேன் ? ரெண்டு பேரும் (பல்லீஸ்) என் மேல விழுந்துட்டாங்க....அவ்வளோதான் நாலு பேரும் போட்ட கூச்சல்ல வீட்டில இருந்த எல்லாரும் வந்துட்டாங்க. ரொம்ப நேரம் கத்தி அழுதுட்டு, அப்பறம் அம்மா மடியில படுத்துகிட்டேன். அம்மா வாஞ்சையா தலையை வருடிவிட்டு பயப்படாதனு தைரியம் சொன்னாங்க.
அட இருங்க பா.... கத இன்னும் முடியல.....
கவிதா கொஞ்சம் சமாதானம் ஆகீட்டா...! ஆனாலும் கண்ணில் ஈரம் காயல. அப்போ வயித்துல ஒரு வித்யாசமான உணர்வு. எனக்கு ஒன்னும் புரியல.
அட ஏதோ பிரம்மை....
மறுபடி அம்மா மடியில சாஞ்சிகிட்டேன்....எல்லாரும் என்ன கொழப்பமா பாத்தாங்க...இல்ல இல்ல மறுபடி ஏதோ வயிறு பக்கம் அசைவு...?!
இப்போ தெளிவா தெரிஞ்சது.
வயிறுக்கு உள்ள இல்ல வெளிய, ஆனா சட்டைக்குள்ள....!
மீண்டும் முண்டுது...தைரியத்தை வரவழச்சிட்டு மெல்ல எழுந்து ப்ராக் பாக்கெட்ட விலக்கி பாத்தா....
அட பாவிகளா!
நீங்க இங்கயாடா இருக்கீங்க....???
ஆமா பாஸ் :( சண்ட போட்ட பல்லிங்க ரெண்டும் சட்ட ஜோப்புக்குள்ள தான் இருந்திச்சுங்க....
சட்ட பாக்கெட்ட ஒதறி விட்டுட்டு அலறினே பாருங்க.....என்னால அவ்வளோ பெருசா அலறமுடியும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.....அப்போல இருந்து பல்லினா என் ஜென்ம விரோதி தான். ஆனாலும் என்னனா ரொம்ப வெறுப்பேத்தும்....நான் தூங்கும்போது என் மேல ஏறி க்ராஸ்பன்னி போவாப்ல, கதவுல இருந்து என் மேல ஜம்ப் பன்னும், மொறச்சி பாத்து வால சொழட்டும்...இப்புடி தேடி வந்து வம்பிழுக்கும்...எங்க வீட்ல உள்ள எல்லாரும் அதென்ன உன் கண்ணுக்கு மட்டும் பல்லி எங்க இருந்தாலும் தெரியிதுனு கேப்பாங்க...அப்டி நோட்டம் விடுவேன்.....என்ன தான் எனக்கு பல்லி பிடிக்காட்டாலும் வன்முறைலலாம் எறங்கினதில்ல. அதபாத்து நா மொறைக்கறதும் என்ன பாத்து அது வால முறுக்குறதும்னு ஒன்லி மைண்டுவாய்ஸ்லயே சண்டபோட்டுப்போம்.
இப்படி இருந்த எனக்கு பல்லி பிடிச்சுபோக காரணமா இருத்தவங்க என் கல்லூரி பேராசிரியை சகுந்தலா மேடம் தான்...பல்லினா வீட்ல இருக்க house lizard மட்டுமில்ல அந்த குடும்பமே நமக்கு ஆகாம இருந்துச்சு...
ஓணன்னா சொல்லவே வேணாம் அறவே புடிக்காது. இந்த அழகுல காலேஜ் II இயர்ல ஓணான டிசெக்ட் செய்யனும்...நான் எவ்வளோ பாவம்! வேற வழி? மார்க் போயிருமே!! வடிவேலு சொல்றமாதிரி உசுப்பேத்தியே நல்லா செய்ய வச்சிருவாங்க எங்க பேராசிரிய பெருமக்கள். ஆனாலும் பல்லினா பிடிக்காது. இப்டி இருந்த நா சகுந்தலா மேடம் இந்த பறக்கும் பல்லிகள பத்தி வருணிச்ச விதம் வாழ்க்கைல மொதோ முறையா எனக்கே அந்த பல்லிகள பாக்கணும்னு ஆசை வந்துச்சு....எப்பவுமே அவங்க பாடம் நடத்தினா கண்டிப்பா அந்த விலங்க நாம இதுக்கு முன்னாடி பாத்திருக்கோமோ இல்லையோ ஆனா நாம கண்ணு முன்ன அந்த கற்பனை பிம்பத்த கொண்டு வந்துருவாங்க. பல்லி அழகா பேராசூட் போட்ட மாதிரி பறந்தா எப்படி இருக்கும்! அதுவும் அழகழகான கலர்ல!!! வாவ்...<3 இப்படி அருமையா பாடம் நடத்தி, இவன் இனத்தை ஏன் நாம வெறுத்தோம் அப்டினு யோசிக்க வச்சிட்டாங்க...சொல்லப்போனா நீ கத்தின சவுண்டுல பயந்து போயி தான் உன் சட்ட பாக்கெட்ல ஒளிஞ்சிருந்துக்கும் பாவம் அப்டினு கரிசனமே வந்துட்டு...... அப்படி தான் பாஸ் பல்லி இனமே பிடிக்காத எனக்கு இந்த பறக்கும் பல்லி பிடிச்சிப்போன கத...
இன்னொரு விஷயம் சொல்லவா...இப்பவும் என் வீட்டு கேட்டுல ஒரு குட்டி ஓணன் வந்து உக்காந்திருக்கும்...தினமு என்ன பாத்து ஓடி போய் ஒளிஞ்சுக்கும்...பட் முன்னமாதிரி இவங்கள நா வெறுக்கறதில்ல...என்ன பாத்து கண்ணாமூச்சி ஆட்ற அந்த குட்டிபயல பாத்தா சிரிப்பும் வியப்பும் தான் வருது....:);)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக